சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை அடுத்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
Nov 26 2020 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை அடுத்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை அவர்களது தாயகம் அனுப்பி வைப்பதற்காகவும் "வந்தே பாரத்" திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.