நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கி - டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்
Nov 26 2020 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
கரூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து மாதத்திற்கு ரூபாய் 25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என அறிவித்தது. மேலும் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளன.