புதுச்சேரியில் மத்திய பாஜக அரசு ஜனநாயக படுகொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டி இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Feb 23 2021 2:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மத்திய பாஜக அரசு கலைத்து, ஜனநாயக படுகொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டி, இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய பாஜக அரசு, பணம் கொடுத்தும், பயமுறுத்தியும் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்ததாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.