பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு : உலகின் 40 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு குறித்து இருவரும் ஆலோசனை
Apr 8 2021 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதரான திரு. ஜான் கெர்ரி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது பருவநிலை மாற்ற பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். அத்துடன் அமெரிக்க நடத்தும், உலகின் 40 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.