ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் சாலைக்கு அம்பேத்கர் பெயர் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்
May 18 2022 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜமைக்காவில் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
ஜமைக்கா நாட்டுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் ஜமைக்கா கவர்னர் ஜெனரல் பேட்ரிக்குடன் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அந்நாட்டில் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ள சாலையை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அம்பேத்கரின் பெயர் கடல் கடந்து பரவி இருப்பதை பார்த்து பெருமை கொள்வதாக தெரிவித்தார். இந்த பயணத்தின் மூலம் ஜமைக்கா சென்ற முதல் இந்திய குடியரசுத்தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.