இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது - மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
Jun 30 2022 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 819 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 52 ஆயிரத்து 164-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 116-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 1 லட்சத்து 4 ஆயிரத்து 555 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரத்து 493 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 13 ஆயிரத்து 827 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 197 கோடியே 61 லட்சத்து 91 ஆயிரத்து 554 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.