நாட்டின் 75-வது சுதந்திரதினவிழா - பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோள் ஏற்று இல்லங்களில் தேசியக் கொடியேற்றிய அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள்
Aug 13 2022 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் தேசிய கோடி ஏற்றுமாறு பிரதமர் திரு. மோடி அழைப்பு விடுத்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மனைவியுடன் சேர்ந்து தேசிய கொடியை ஏற்றினார். நடிகர் மோகன்லால், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.