பயணி கொடுத்த ரூ.500ஐ ரூ.20 ஆக மாற்றி மோசடி: ரயில்வே ஊழியரின் ஏமாற்று வேலை வீடியோ வைரல் - கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல்
Nov 28 2022 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் டிக்கெட் பயணியிடம் ரயில்வே ஊழியர் மோசடி செய்யும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் பயணி கொடுத்த 500 ரூபாயை கண நேரத்தில் மோசடியாக மாற்றி, 20 ரூபாய்தான் கொடுத்ததாக கவுன்ட்டரில் இருந்த ரயில்வே ஊழியர் ஏமாற்ற முயற்சிக்கிறார். இதனை பயணியின் பின்னால் இருந்த நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஊழியர் கைது செய்யப்பட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. தங்களுக்கும் இது போல் நடந்துள்ளதாகவும், தொழிற்சங்க ஆதரவு தைரியத்தில் ஊழியர்கள் இப்படி நடந்து கொள்வதாகவும் பலர் கருத்துத் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.