கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 வயது குழந்தையை கொடூரமான கொன்ற தந்தை கைது - உணவு வாங்கக்கூட பணம் இல்லாததால் விரக்தியில் விபரீத முடிவு
Nov 28 2022 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே 2 வயது மகளைக் கொலை செய்த ஐடி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த ராகுல் பர்மர் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன் மனைவி, குழந்தையுடன் பெங்களூவில் குடியேறியுள்ளார். இந்தநிலையில் 2 வயது மகளுடன் அவர் திடீரென தலைமறைவானார். மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில் கெந்தட்டி கிராம ஏரியில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. பார்மரை பிடித்து விசாரித்ததில், குழந்தைக்கு உணவு வாங்கக் கூட பணம் இல்லாததால் கொலை செய்ததாக கூறினார். கடந்த 6 மாதங்களாக வேலையில்லாமல் இருந்த அவர் பிட்காயின் வணிகத்திலும் பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.