பெண்கள் குறித்த ஆட்சேபகரமான கருத்தால் சர்ச்சை... மன்னிப்புக் கோரினார் பாபா ராம்தேவ்
Nov 28 2022 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்கள் குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததற்கு யோக குரு பாபா ராம்தேவ் மன்னிப்புக் கோரினார். மஹாராஷ்ட்ராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், பெண்கள் புடவையிலும் அழகாக இருக்கிறார்கள், சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள், எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள் என்று பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சர்ச்சை கருத்து குறித்து விளக்கம் கேட்டு பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநில மகளிர் ஆணையம், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்நிலையில், தனது கருத்துக்கு யோக குரு பாபா ராம்தேவ் மன்னிப்புக் கோரியுள்ளார்.