குறிப்பிட்ட காலத்துக்குப் பின் நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் வீரியம் குறைவதாக அதிர்ச்சித் தகவல் - கிருமிகள் மருந்துகளுக்கு எதிரான ஆற்றலை அதிகரித்துக் கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
Dec 2 2022 8:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருமிகளுக்கு எதிராக நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் வீரியம் குறைந்தவைகளாக மாறிவிடுவதாகவும், எச்ஐவி உள்ளிட்ட ஆபத்துக்களில் உயிரிழப்பவர்களை விட இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட கிருமிகள் தாக்கும் போது அவற்றிற்கு எதிரான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அந்த கிருமிகள் இந்த மருந்துகளுக்கு எதிரான ஆற்றலை அதிகரித்துக்கொள்கின்றன. இதனால் மருந்துகள் வீரியமற்றுப் போய் விடுகின்றன. இது போன்ற ஒரு நிலையால் கடந்த 2019ம் ஆண்டு மட்டும் சுமார் 13 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை ஹெச்.ஐ.வி. மற்றும் மலேரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. வீரியம் மிக்க மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகளும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.