நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் எதிரொலி - மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம்
Feb 1 2023 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பட்ஜெட் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. வர்த்தக தொடக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் வரை உயர்ந்து 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. தேசிய பங்கு சந்தை நிஃப்டி 130 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 792 புள்ளிகளாக இருந்தது. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 20 காசு உயர்ந்து 81 ரூபாய் 77 காசாக இருந்தது.