ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு முதல் அமர்வுக்கான முடிவுகள் வெளியானது் - நாடு முழுவதும் 20 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்
Feb 7 2023 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய தேர்வு முகமை நடத்திய ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இம்முடிவுகளின் படி, 20 மாணவர்கள் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்கும் நிலையில், மாணவிகள் யாரும் 100 சதவிகித மதிப்பெண்கள் பெறவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான இந்தியா தொழில்நுட்ப கழகம், தேசிய தொழில்நுட்ப கழகம், இந்தியா தகவல் தொழில்நுட்ப கழகம் போன்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற நிலையில், 2 லட்சத்து 56 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட, 8 லட்சத்து 23 ஆயிரத்து 967 பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் ஒரு மாணவி உள்பட 14 பேர் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 20 பேர் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.