2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியா வந்தடைந்தார்... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
Mar 20 2023 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2 நாள் அரசுமறை பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார். பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய பிரதமருடன் ஆலோசனை நடத்த அவர் இந்தியா வந்துள்ளார். பிற்பகலில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் கிஷிடா ஆகியோர் இந்தியாவின் ஜி20 மற்றும் ஜப்பானின் ஜி7 தலைவர் பதவிக்கான முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும் இருவர் சந்திப்புக்குப் பிறகு இந்தோ- பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான முக்கியம் திட்டம் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.