உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் போராட்டம்
Mar 20 2023 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தனர். அதன்படி ராம்லீலா மைதானத்தில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான கிஷான் மோர்ச்சா சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தால் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.