ஜார்கண்ட்டில் பணியமர்த்தல் கொள்கைக்கு மாணவர் அமைப்பு எதிர்ப்பு : துணை ராணுவப் படை மூலம் பலத்த பாதுகாப்பு
Jun 10 2023 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மாநில மாணவர் கூட்டமைப்பு சார்பில் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதிய பணியமர்த்தல் கொள்கையை எதிர்த்து மாணவர் கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இந்த திட்டம், முழுவதுமாக ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், மாணவர் அமைப்பின் அழைப்பை ஏற்று பல்வேறு இடங்களிலும் கடைகள் திறக்கப்படவில்லை. போக்குவரத்தும் குறைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.