மகாராஷ்டிராவில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து : உடனடியாக ஊழியர்கள் ஆலையை விட்டு வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
Jun 10 2023 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிர மாநிலம் வாடா மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், வான் உயரத்திற்கு கரும்புகை எழுந்து அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயண பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. ஊழியர்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.