பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கும் நோக்கதோடு, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக மாநிலங்களவை எம்.பி. கபில்சிபல் பேட்டி
Jun 10 2023 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கும் நோக்கதோடு, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக மாநிலங்களவை எம்.பி. கபில்சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், 2024ல் நடைபெறும் பொதுத் தேர்தலில், பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்குவதே நோக்கம் எனக் கூறியுள்ளார். இந்த ஒரே எண்ணத்துடன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்வார்கள் என நம்புவதாகவும் கபில்சிபல் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் நல்ல குடிமகனாக கோட்சேவை ஏற்பது, மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரானது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள அவர், ஆர்.எஸ்.எஸ். தரப்பினர், ஆங்கிலேயர்களுக்கு உதவியவர்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.