உத்தரகாண்ட்டில் வனப்பகுதியில் குட்டிகளை காப்பற்ற வாகன ஓட்டியை துரத்திய யானைகள் : வாகன ஓட்டி சாலையில் விழுந்து எழுந்து பதறி ஓடிய காட்சிகள் வைரல்
Jun 10 2023 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையை கடக்க முயன்ற யானை கூட்டம் ஒன்று திடீரென இருசக்கர வாகன ஓட்டியை துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது. நைனிதல் மாவட்டம் ராம்நகர் வனப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன் யானைகள் கூட்டம் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது இரண்டு யானைகள், குட்டிகளை பாதுகாக்கும் வகையில் சாலையில் சென்ற வாகன ஓட்டியை விரட்டியபடி பிளிரியது. இதனால், பதட்டமடைந்த வாகன ஒட்டி அலறியடித்து ஓடியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநில வனத்துறையினர் அதிக ஒலி எழுப்பாமல் சாலையை கடந்து செல்லுமாறு வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளனர்.