52 நாட்களாக சந்திரனை சுற்றி வரும் SHAPE கருவி : போதிய தரவுகளை அனுப்பி வருவதாக இஸ்ரோ தகவல்
Sep 28 2023 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ள நிலையில், உந்துவிசை தொகுதியில் உள்ள ஷேப் அறிவியல் கருவி, அதன் செயல்பாடுகளில் போதுமான தரவுகளை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்தநிலையில், 14 நாட்கள் ஆய்வுக்குப் பிறகு லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் உந்துவிசை கலனில் உள்ள ஷேப் எனப்படும் கருவி சந்திரனை 52 நாட்களாக சுற்றி போதிய தரவுகளை சேகரித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.