ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜியிடம், சிபிஐ அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை
Sep 11 2019 6:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜியிடம், சிபிஐ அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரிடம் சி.பி.ஐ. ஏற்கெனவே விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், அப்ரூவராக மாறிய இந்திராணி, கடந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையிடம் வாக்குமூலம் அளித்தார். அவரிடம், மேலும் விசாரணை நடத்த, சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. சி.பி.ஐ.-யின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஜே.சி. ஜக்தாலே, இந்திராணியை விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, மற்றொரு வழக்கில் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குத் தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.