ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு - திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், ஜாமீன் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Sep 11 2019 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், ஜாமின் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை கடந்த 5ம் தேதி நிராகரித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், வரும் 19ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஐ காவலின்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ப. சிதம்பரம் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜாமின் கோரி, ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ-ன் கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.