சபரிமலைக்கு என தனிச்சட்டத்தை உருவாக்க வேண்டும் - கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Nov 20 2019 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. குருவாயூர் கோயிலைப் போன்று சபரிமலை கோயிலுக்கும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வரும் ஜனவரி 3-ம் தேதிக்குள் இதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.