புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மஸ்தான் சாகிப் தர்கா சந்தனக்கூடு விழா - பக்தர்கள் வழிபாடு
Apr 2 2021 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்திபெற்ற மஸ்தான் சாகிப் தர்காவின் சந்தனக்கூடு விழா விமரிசையாக நடைபெற்றது. சந்தனக்கூடு விழாவையொட்டி, மஸ்தான் சாகிப் தர்காவில் இருந்து, கண்கவர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு புறப்பட்டு, நகரின் முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்தது. இதனைத்தொடர்ந்து மஸ்தான் சாகிப் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்கால், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.