மகாராஷ்டிராவில் கட்டப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் : நவிமும்பையில் நடைபெற்ற பூமி பூஜையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்பு
Jun 8 2023 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நவி மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்டும் பணி தொடங்கியது. இதற்கான பூமிபூஜையில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
நவி மும்பையில் உள்ள உல்வே பகுதியில் திருப்பதி கோயில் கட்டுவதற்காக 10 ஏக்கர் நிலத்தை திருமலை தேவஸ்தானத்திற்கு மகாராஷ்டிர அரசு கொடுத்துள்ளது. அங்கு ரேமண்ட் நிறுவனத் தலைவர் சிங்கானியா அளிக்கும் 70 கோடி ரூபாய் நிதியில் இந்தக் கோவில் கட்டப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளார். பல்வேறு காரணங்களால் திருமலைக்குச் செல்ல முடியாத ஆயிரக்கணக்கான பக்தர்களின் விருப்பத்தை இக்கோயில் நிறைவேற்றும் என்றும் கோயில் கட்டுமானப் பணிக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மகாராஷ்டிர அரசு வழங்கும் என்றும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.