டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார் ரஹானே : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்த முதல் வீரர் ரஹானே
Jun 10 2023 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணி வீரர் அஜிங்கிய ரஹானே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்து முத்திரைப் பதித்துள்ளார். லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 69 ரன்களை அவர் எட்டியபோது டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார். மேலும் டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை எடுத்த 13-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அரை சதம் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரஹானே படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் இதுவரை 12 சதம், 26 அரை சதங்களை அடித்துள்ளார்.