வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு - தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் என அறிவிப்பு
Jun 30 2020 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து, ஜுலை 1 முதல் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டத்திற்குள் இபாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும், வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கு இடையே சென்று வரவும், இபாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் ஜுன் 30 வரை வழங்கப்பட்ட இபாஸ் ஜூலை 5 வரை செல்லும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.