தமிழகத்தில் பொறியல் கல்லூரிகளுக்கு ஜூலை 31 வரை விடுமுறை நீட்டிப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Jun 30 2020 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பொறியல் கல்லூரிகளுக்கு ஜூலை 31 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஜூலை 31 -ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவரை தேர்வுகளும் நடைபெறாது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும், ஆன்லைன் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.