தாம்பரம் அடுத்த முடிச்சூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர் - 8 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
Nov 26 2020 8:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புயல் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உள்ள அமுதம் நகர், முல்லை நகர் உள்ளிட்ட குடியிப்பு பகுதிகளில், 8 அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கியதால், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில், தரைத்தளத்தில் உள்ள அனைத்து விடுகளிலும் மழை நீர் உட்புகுந்ததால், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை வாங்குவதற்காக அவதிப்படுபவர்களை, தீயணைப்பு வீரர்களில் பைபர் படகுகளில் மீட்டனர்.