நிவர் புயல் காரணமாக, திருப்பத்தூரில் பெய்து வரும் தொடர் மழையால், ஆம்பூர் அணை நிரம்பி காட்டாற்றில் வெள்ளம்
Nov 26 2020 8:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிவர் புயல் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆம்பூர் பகுதியில் உள்ள ஆணை அதன் கொள்ளளவை எட்டியது.இதில் இருந்து வெளியேறும் நீர் காட்டாற்றில் வெள்ளமாக கரைபுரண்டு செல்கிறது. பெத்தலகேம், ரெட்டி தோப்பு பாலம், மோட்டு கொல்லை ஜலால்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் ராஜீவ்காந்தி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தாலுகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 14 முகாம்களில் 368 பேர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.