தவவாழ்வு வாழ்ந்த சின்னம்மாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது : - உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடும் கண்டனம்
Jan 13 2021 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தவ வாழ்வு வாழ்ந்த சின்னம்மா குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதை பொருத்துக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் திருமதி கோகுல இந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுவெளியில் பெண்களை அநாகரீகமாக பேசி வரும் திரு.மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை அரும்பாக்கத்தில், உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இன்று நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திருமதி கோகுல இந்திரா, சின்னம்மா தங்களால் போற்றப்படக் கூடியவர் எனக் கூறினார். மாண்புமிகு அம்மாவுக்கு உறுதுணையாக இருந்தவர் என்றும் தவ வாழ்க்கை வாழ்ந்த சின்னம்மா குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திருமதி கோகுல இந்திரா தெரிவித்தார்.