கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதை கண்டித்து படகுகளில் கருப்பு கொடி ஏற்றி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்
Jan 20 2021 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப் படகுகளை அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதை கண்டித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள், விசைப் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், இன்று 11ஆவது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.