மதுரையில் நாயை கட்டையால் அடித்து துடிக்க துடிக்க கொன்ற நபர் மீது வழக்குப் பதிவு
Jan 23 2021 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் நாயை கட்டையால் அடித்து துடிக்க துடிக்க கொன்ற நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் செல்லூர் சிவகாமி தெரு பகுதியை சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தெரு நாய் ஒன்றினை மனிதத்தன்மையற்ற வகையில் ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டையால் தலைப்பகுதியில் தாக்கியுள்ளார். தொடர் தாக்குதல் காரணமாக நாய் துடிதுடித்து உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையானது. இச்சம்பவம் குறித்து வடக்கு வட்ட கிராம அலுவலர் முத்துமொழி, நாயை கட்டையால் அடித்துகொன்ற விமல்ராஜ் மீது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் பேரில் செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.