திருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்
Jan 23 2021 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர். திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திரு.ஹட்வின்ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் திமுக, அதிமுக கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் கழக வழக்கறிஞர் பிரிவு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. கு. சீனிவாசன் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இருள்நீக்கி திரு.சேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.