சின்னம்மா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் - படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அறிவிப்பு
Jan 24 2021 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவில் சிகிச்சை பெறும் சின்னம்மாவின் உடல்நிலையில், மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தியாகத்தலைவி சின்னம்மா காய்ச்சல் மற்றும் இருமலால், பாதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சின்னம்மா உடல்நிலையில்
மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா
மருத்துவமனை தெரிவித்துள்ளது. அனைத்து
சோதனைகளிலும் உடல்நிலை சீராக இருப்பதாகவும்,
வழக்கம்போல் உணவு எடுத்துக்கொள்வதாகவும்,
உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும்
மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
சுவாச உதவிக்காக வழங்கப்படும் ஆக்ஸிஜன் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு உடல்நிலையில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.