சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில், 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல் - 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
Apr 8 2021 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 4 இடங்களிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக, சென்னைப் பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரு.மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் உள்ள 4 மையங்களில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.