விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நோய் தாக்கியதால் 'மா' விளைச்சல் பாதிப்பு - விவசாயிகள் வேதனை
Apr 8 2021 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாமரங்களை நோய் தாக்கியுள்ளதால், மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திக்கோயில், நெடுஞ்குளம், பட்டுப்பூச்சி, தானிப்பாறை ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில், 'மா' விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாமரங்களை தேன் நோய் தாக்கியுள்ளது. இதனால் பிஞ்சு வருவதற்கு முன்பாகவே பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. நோய்த் தாக்கத்தின் காரணமாக மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.