கூடுதல் வட்டி கேட்டு மூதாட்டி மீது தாக்குதல் : கரூரில் கந்துவட்டி நபரை கைது செய்த போலீசார்
Jun 29 2022 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில், மூதாட்டியிடம் கடன் கொடுத்த நபர், கூடுதல் வட்டிகேட்டு அவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த சுசீலா என்பவர், தனது ஒரே மகன் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் வட்டிக்கு கடனாக 10 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதற்கு இருமடங்காக 20 ஆயிரம் ரூபாயை அவர் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனாலும், கூடுதல் பணம் கேட்டு தொல்லை செய்த செல்வகுமார், மூதாட்டியை தகாத வார்த்தையால் திட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக மூதாட்டி சுசீலா அளித்த புகாரின் அடிப்படையில், செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.