சென்னை பெருங்குடி அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சோகம் - கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது நேரிட்ட அவலம்
Jun 30 2022 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பெருங்குடி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
பெருங்குடி காமராஜர் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில், ஆவடியை சேர்ந்த பெரியசாமி, திண்டிவனம் பகுதியை தட்சணாமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். முதலில் இறங்கிய பெரியசாமியை விஷவாயு தாக்கிய நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற தட்சனாமூர்த்தியையும் விஷவாயு தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். கழிவு நீர் தொட்டிக்குள் மயங்கிய நிலையில் இருந்த தட்சணாமூர்த்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலை கைபற்றி இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.