கடல் வளத்தை பாதிக்கும் சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் - ராமநாதபுரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்
Jul 4 2022 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடல் வளத்தை பாதிக்கும் சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நடைபெற்ற நாட்டுப்படகு மீனவர்கள் சங்க மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இருந்து நாட்டுப்புற மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாட்டுப் படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதற்கு உடந்தையாக இருக்கும் மீன்வளத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக முதலமைச்சரை சந்தித்து நேரில் கோரிக்கை இது தொடர்பாக கோரிக்கை மனு அளிப்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.