திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கிடையே மோதல் : கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
Jul 6 2022 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி அருகே கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் காரணமாக பதட்டம் நிலவியது.
தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் அனைத்து சாதியினரும் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவின் ஆலய வழிபாட்டில் அனைத்து சாதியினரும் சாதி மதம் பாராமல் வழிபாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் ஒரு பிரிவினர் துர்க்கை அம்மனுக்கு நேர்த்தி கடனாக கொண்டு வந்த நகைகளை தூக்கி வீசியும், தீர்த்த கலசங்களை செலுத்த விடாமலும், முளைப்பாரிகளை எடுத்துச் செல்ல விடாமலும் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த தங்கச்சியம்மாபட்டி கிராம மக்கள் இன்று ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.