சென்னை விமான நிலையத்தில் ரூ.1.55 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் : 3 பேர் கைது - சுங்கத்துறை விசாரணை
Jul 7 2022 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பையில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அப்துல் அஜீஸ் என்ற பயணியின் கைப்பைக்குள் இருந்து 885 கிராம் தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகள் இவரிடம் இருந்து இரண்டரை கிலோ எடை கொண்ட தங்க பசை மற்றும் தங்க செயின் கைப்பற்றப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.