தஞ்சை: குறுவை நெல் சாகுபடி மும்முரம் - உரங்களின் விலையினை தனியார் உயர்த்தி விற்பதாகப் புகார்
Aug 8 2022 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், உரத்தட்டுப்பாடு நிலவுவதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உரங்களின் விலையினை தனியார் உயர்த்தி விற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் அதிக அளவில் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசு போதிய உரங்களை விநியோகம் செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தனியார் விற்பனையாளர்கள், உரங்களின் விலையை உயர்த்தி விற்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், குறுவைத் தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு சரிவர கிடைப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.