பத்திரிகை உலகில் சாதனை புரிந்த சி.பா.ஆதித்தனாரின் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம் : பிறந்தநாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம்
Sep 27 2022 2:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பத்திரிகை உலகில் சாதனை புரிந்த தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளான இன்று அவரது பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பத்திரிகை உலகில் சாதனைகள் புரிந்தவரும், தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவரும், தமிழக அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவருமான, தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்நாளில் அவரது பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.