தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் நடத்தும் இரண்டு கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம்
Sep 28 2022 8:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் நடத்தும் இரண்டு கல்குவாரிகளை தடை செய்யக்கோரி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் மீராங்குளம் பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் இரண்டு கல்குவாரிகளை நடத்தி வருகின்றனர். இந்த கல்குவாரிகளில் வைக்கப்படும் சக்தி வாய்ந்த வெடிகளால் அப்பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், பனையேறும் தொழிலாளர்கள் பனைமரம் ஏறி கொண்டிருக்கும்போது வெடி வைக்கப்படுவதால் அவர்கள் உயிர் பயத்துடன் தொழில் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு கல்குவாரிகளையும் தமிழக அரசு உடனடியாக தடை செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.