காரைக்கால்: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
Feb 1 2023 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல், தங்களது படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். திருநள்ளாறு, நெடுங்காடு, திருப்பட்டினம், கோட்டுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருவதோடு, கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பதினொரு மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவ தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.