ராமநாதபுரம்: தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால் கடும் நடவடிக்கை - மீனவளத்துறையினர் எச்சரிக்கை
Feb 1 2023 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புயல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழக்கரை, சின்ன ஏர்வாடி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மைக் மூலம் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.