திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் அடைப்புகளை கையால் சுத்தம் செய்யும் அவலம்
Mar 25 2023 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் அடைப்புகளை கையால் சுத்தம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும் கழிவுநீர் கால்வாயில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அடைப்பு ஏற்பட்டு சேரும் சகதியுமாக தேங்கி நின்றதால் வேங்கிக்கால் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் வெறும் கையால் கையுறை, முகக்கவசம் எதையும் பயன்படுத்தாமல் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு தேங்கி நிற்கும் கழிவுகளை வெறும் கையால் வெளியே எடுத்துக்கொட்டி பின்னர் கூடையில் அள்ளி டிராக்டரில் ஏற்றி சென்றனர். ஊராட்சி நிர்வாகம் முகக்கவசம் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாக கொடுப்பதில்லை என தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.