ராமநாதபுரம் அருகே இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் நீர், நிலம் பாதிப்பு - கிராம மக்கள் போராட்டம்
Mar 25 2023 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், நீரும் நிலமும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி, இறால் பண்ணையை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாடானை அருகே ஓரியூர் கிராம எல்லையில் உள்ள தனியார் இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகிலுள்ள ஆற்றில் கலக்கிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், ஆற்றில் குளிக்கும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இறால் பண்ணைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.