தேனி அருகே பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டியால் பாதிப்பு - தரமற்ற குடிநீர்தொட்டியை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Mar 25 2023 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். தரமற்ற குடிநீர் தொட்டியை கட்டியது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். குடிநீர் பற்றாக்குறையால் மிகுந்த சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.